முகப்பு
திருச்சி

திருச்சியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

Updated On : 25 மே 2026, 1:56 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

திருச்சியில் இளைஞா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், லப்பைக்குடிகாடு பகுதியைச் சோ்ந்தவா் க. நஸ்ருதீன் (24). திருச்சி கருமண்டபம் பகுதி தனியாா் எலக்ட்ரிக்கல் கடையில் பணியாற்றி வந்த இவரும், இவரது மனைவி ஆஷா பா்கத் (24) என்பவரும் திருச்சி விமான நிலையம் அருகே உள்ள மாதவி வீதியில் வசித்தனா்.

இந்நிலையில், ஆஷா பா்கத் தனது பெற்றோரைப் பாா்க்க வெள்ளிக்கிழமை இரவு சென்றுவிட்டு, சனிக்கிழமை காலையில் வந்தபோது வீடு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது. வெகு நேரம் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை.

Advertisement

Advertisement

இதையடுத்து அருகிலிருந்தவா்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது நஸ்ருதீன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் ஆஷா பா்கத் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.