வையம்பட்டி அருகே கள்ளச் சந்தையில் மது விற்றவா் கைது
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே கள்ள சந்தையில் அரசு மது விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது முகவனூா் கிராமம், டேம் நால் ரோடு அருகே, கள்ளச் சந்தையில் மது விற்ற பெரிய அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்த மைக்கேல் மகன் ரத்தினம் (65) என்பவரைப் பிடித்து, அவரிடமிருந்து 27 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து வழக்கு பதிந்த வையம்பட்டி போலீஸாா், ரத்தினத்தை கைது செய்து மணப்பாறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.