அரியலூர்

விழிப்புணர்வுப் பேரணி

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் போக்குவரத்து காவல்துறை சார்பில் தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்த மோட்டார் சைக்கிள் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

DIN

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் போக்குவரத்து காவல்துறை சார்பில் தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்த மோட்டார் சைக்கிள் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஜயங்கொண்டம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். ஜயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் கென்னடி பேரணியை தொடங்கிவைத்தார். பேரணியானது ஜயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் புறப்பட்டு பேருந்து நிலைய சாலை, அண்ணா சிலை, கடைவீதி, நான்குசாலை வழியாக சென்று சிதம்பரம் சாலையில் முடிவடைந்தது. பேரணியில் தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்தனர். இதில் போக்குவரத்து காவலர்கள், ஊர்காவல் படையினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

களம்காவல் முதல்நாள் வசூல் எவ்வளவு? அதிகாரபூர்வ அறிவிப்பு!

முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பை வென்றது இன்டர் மியாமி..! தாமஸ் முல்லருக்கு அதிர்ச்சி அளித்த மெஸ்ஸி!

படையப்பா மறுவெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மதுரையில் வேலு நாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT