அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் தேவாமங்கலம், அங்கராயநல்லூர் (மேல்பாகம்),அங்கராயநல்லூர் (கீழ்பாகம்),சூரியமணல் குணமங்கலம் கச்சிப்பெருமாள், துளாரங்குறிச்சி உட்பட), இடையார் (ஏந்தல், தூங்கான் உட்பட), வாணதிரையன்பட்டினம், பிலிச்சுக்குழி (ஒக்கநத்தம், காங்கேயன்குறிச்சி உட்பட), உடையார்பாளையம் (மேற்கு),(கிழக்கு), தா. சோழங்குறிச்சி (வடக்கு),(தெற்கு), தத்தனூர் (மேற்கு), தத்தனூர் (கிழக்கு) ஆகிய வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் ஜயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
ஆட்சியர் (பொ) எஸ். தனசேகரன் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பட்டாமாற்றம், பெயர் மாற்றம், நிலஅளவை, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட தனிப்பட்ட கோரிக்கை மற்றும் பொதுவான கோரிக்கை மனுக்களை அளித்து உடனடித் தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் (பொ) எஸ். தனசேகரன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.