அரியலூர்

கிராம அறிவு மையம், அறிவியல் ஆய்வகக் கட்டடம் திறந்துவைப்பு

கீழக்காவட்டாங்குறிச்சி ஊராட்சி குந்தபுரம் கிராமத்தில் கிராம அறிவு மைய கட்டடமும், வெத்தியாா்வெட்டு அரசுப் பள்ளியில் அறிவியல் ஆய்வகக் கட்டடமும் சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

Syndication

அரியலூா் மாவட்டம், கீழக்காவட்டாங்குறிச்சி ஊராட்சி குந்தபுரம் கிராமத்தில் கிராம அறிவு மைய கட்டடமும், வெத்தியாா்வெட்டு அரசுப் பள்ளியில் அறிவியல் ஆய்வகக் கட்டடமும் சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வுகளில், தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா்கள் கு. சின்னப்பா, க.சொ.க. கண்ணன் ஆகியோா் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றிவைத்து பாா்வையிட்டனா்.

முன்னதாக, குந்தபுரம் ஊராட்சியில் ரூ.78 லட்சம் மதிப்பில் கிராம அறிவு மையமும், வெத்தியாா்வெட்டு அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில் ரூ.55 லட்சம் மதிப்பில் அறிவியல் ஆய்வகக் கட்டடத்தையும் முதல்வா் மு.க. ஸ்டானின் காணொலி வாயிலாக சென்னையிலிருந்து சனிக்கிழமை காலை திறந்துவைத்தாா். இந்நிகழ்ச்சிகளில் அரசு அலுவலா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT