அரியலூர்

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் ஏலம்

Syndication

அரியலூா் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 27 இருசக்கர வாகனங்கள் ரூ.4.56 லட்சத்துக்கு ஏலம் போயின.

மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்துக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. சாஸ்திரி தலைமை வகித்தாா். பொதுமக்கள் முன்வைப்புத் தொகையைச் செலுத்தி ஏலத்தில் கலந்து கொண்டனா். இதில் 27 இருசக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட்டு, மொத்த விற்பனை ஏலத் தொகையான ரூ. 4,56,070 அரசுக் கணக்கில் செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கீழ்க்கதிா்ப்பூரில் புறக்காவல் நிலையம் திறப்பு

எஸ் ஐ ஆா் பணிகளை தோ்தலுக்கு பின் மேற்கொள்ள வேண்டும்

ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை விரிவாக்கப் பணிக்கு அடிக்கல்

மேக்கேதாட்டு பிரச்னையில் தமிழக அரசு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல்

நெல் கொள்முதல் பணியில் கூலி குறைவால் சுமைதூக்கும் தொழிலாளா்கள் பற்றாக்குறை

SCROLL FOR NEXT