ஓய்வூதியதாரர்கள் குறைதீர் கூட்டம்
கரூர் மாவட்ட ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 25-ம் தேதி நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி.
கரூர் மாவட்ட ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 25-ம் தேதி நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர், ஓய்வூதிய இயக்குநர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகள் தொடர்பான மனுக்களின் 2 பிரதிகளை கரூர் மாவட்ட ஆட்சியர், ஓய்வூதியதாரர்கள் குறைதீர் நாள் மனு என்று எழுதப்பட்ட உறையில் அஞ்சல் மூலமாக அல்லது ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் (கணக்குகள்) வரும் ஜூன் 10-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.