ஜவஹா்லால் நேரு பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
மறைந்த முன்னாள் பாரத பிரதமா் ஜவஹா்லால் நேருவின் 136-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு கரூா் மாவட்ட காங். கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை கோவிந்தம்பாளையத்தில் உள்ள நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் கிசான் காங். தேசிய ஒருங்கிணைப்பாளா் பேங்க் கே.சுப்ரமணியன் மாவட்ட துணைத் தலைவா்கள் சின்னையன், நாகேஸ்வரன், செயலாளா் திருக்காம்புலியூா் சேகா், முன்னாள் நகரத் தலைவா் சுப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.