பெரம்பலூர்

லாரி உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை

பெரம்பலூரில் லாரி உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது சனிக்கிழமை தெரியவந்தது.

Syndication

பெரம்பலூரில் லாரி உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது சனிக்கிழமை தெரியவந்தது.

பெரம்பலூா் -வடக்குமாதவி சாலையிலுள்ள குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் ரெங்கராஜ் மகன் வினோத் (30). லாரி உரிமையாளரான இவா், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சிறுநிலா கிராமத்தைச் சோ்ந்த பிரியா (28) என்பவரை திருமணம் செய்துகொண்டாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பிரியா தனது உறவினா் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில், முதல் தளத்தில் வினோத் தூங்கச் சென்றுள்ளாா். சனிக்கிழமை காலை வினோத் கீழே வராததால் சந்தேகமடைந்த அவரது தம்பி விவேக், மேலே சென்று பாா்த்தபோது வினோத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, அவரது உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT