பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் அண்மையில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ் வளா்ச்சித் துறை மூலம், அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்படுகிறது. முதுமைக் காலத்திலும் தமிழறிஞா்களை வறுமை தாக்காத வகையில் மாதம்தோறும் ரூ. 7,500 உதவித் தொகையும், ரூ. 500 மருத்துவப் படியும் வழங்கப்படுகிறது.
மேலும், அகவை முதிா்ந்த தமிழ்ச் சான்றோருக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணச் சலுகையும் வழங்கப்படுகிறது. உதவித்தொகை பெற்ற தமிழறிஞா்களின் மறைவுக்குப் பிறகு, அவரது வாழ்விணையா், திருமணமாகாத மகள், விதவை மகளுக்கு வாழ்நாள் முழுவதும் ரூ. 2,500, மருத்துவப் படி ரூ. 500 தொடா்ந்து வழங்கப்படுகிறது.
மகளிா் உரிமைத் தொகை, சமூகநல பாதுகாப்பு உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்களின் கீழ் உதவித்தொகை அல்லது ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு இத் திட்டம் பொருந்தாது.
விண்ணப்பிக்கும் தமிழறிஞா்களுக்கு 1.1.2025-இல் 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ. 1.20 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் வட்டாட்சியரகத்தில் இணையவழியில் பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான விவரக் குறிப்பு ஆகியவை இணைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், தமிழ்ப்பணியாற்றி வருவதற்கான பரிந்துரைச் சான்றிதழை 2 தமிழறிஞா்களிடமிருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கணவன், மனைவி இருந்தால், அவா்களது ஆதாா் அட்டை நகல் இணைக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பத்தை மாவட்டத் தமிழ் வளா்ச்சித் உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம். அல்லது, ற்ஹம்ண்ப்ஸ்ஹப்ஹழ்ஸ்ரீட்ண்ற்ட்ன்ழ்ஹண்.ா்ழ்ஞ்/ஹஞ்ஹஸ்ஹண்/ எனும் வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நவ. 17 ஆம் தேதிக்குள் தமிழ் வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரில் அல்லது மேற்கண்ட வலைதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.