புதுக்கோட்டை

கணினி கண்காணிப்பு, கட்டுப்பாட்டு அறை திறப்பு

நகரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் சமூக விரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியும் என்றார் ஆட்சியர் சு. கணேஷ்.

DIN

நகரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் சமூக விரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியும் என்றார் ஆட்சியர் சு. கணேஷ்.
புதுகை மாவட்ட எஸ்.பி ஜெ.லோகநாதன் முன்னிலையில் நகரக் காவல் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள கணினி கண்காணிப்பு,கட்டுப்பாடு அறையை புதன்கிழமை திறந்து வைத்து மேலும் அவர் பேசியது: புதுகை மாவட்டத்துக்கான சாலை பாதுகாப்பு நிதி ரூ.30 லட்சத்தில் திருக்கோகர்ணம், மாலையீடு, மேட்டுப்பட்டி, பிச்சத்தான்பட்டி, பிள்ளைதண்ணீர்ப்பந்தல் உள்ளிட்ட 36 இடங்களில் கண்காணிப்புக் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், நகரக் காவல் நிலையத்தில் கணினி, டிஜிட்டல் திரைகளுடன் நிறுவப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை தற்போது திறந்து வைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. இதன்மூலம் பொதுமக்களின் பாதுகாப்பு, சமூக விரோதச் செயல்கள்  கண்காணிக்கப்பட்டு தடுக்கப்படும் என்றார்.
இதில், நகரக் காவல் கண்காணிப்பாளர் பி. ஆறுமுகம், நகரக் காவல் உதவி ஆய்வாளர் விவேக், சிறப்புப்பிரிவு தலைமைக் காவலர் தேவதயவு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT