புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள அணவயல் நொண்டி அய்யனார் கோயிலில் புதன்கிழமை பேய் விரட்டும் நிகழ்வு நடைபெற்றது.
அணவயல் அம்பேத்கர் நகரில் உள்ள நொண்டி அய்யனார் கோயில் திருவிழா கடந்த திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் முக்கிய நிகழ்ச்சியான பேய் விரட்டும் நிகழ்வு புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். பின்னர், கோயில் பூசாரிகளுக்கு மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால் அலங்காரம் செய்து, மாலைகள் அணிவித்தனர்.
பின்னர், பூசாரிகள் தடியை ஏந்தியவாறு, ஆக்ரோஷமாக சப்தமிட்டபடி ஆடினர். அப்போது, பேய் பிடித்துள்ளதாக அங்கு அழைத்து வரப்பட்ட பெண்களும் ஆடத்தொடங்கினர். பின்னர், கோயில் பூசாரிகள் அவர்களை தடியால் அடித்து விரட்டினர். அங்கிருந்து கிராமத்தின் எல்லை வரை ஓடி மயங்கி விழுந்த பெண்களை கிராமத்தினர் மீட்டு வந்தனர். பின்னர், அந்த பெண்கள் குடங்களில் மஞ்சள் நீர் கொண்டு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். விழாவில், நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.