புதுக்கோட்டை மாவட்டம்,ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி புதன்கிழமை இலைகளை கழுத்தில் போட்டவாறு அப்பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. மத்திய,மாநில அமைச்சர்களின் உறுதியளிப்பை ஏற்று போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இதைக்கண்டித்து, நெடுவாசலில் ஏப்.12-ம் தேதி மீண்டும் போராட்டத்தை தொடங்கிய மக்கள், தொடர்ந்து பல்வேறு கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
நெடுவாசல் நாடியம்மன் கோயில் அருகே 36-வது நாளாக புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டோர் கழுத்தில் இலைகளை போட்டுக்கொண்டு, திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், திட்டத்துக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.