முகப்பு
புதுக்கோட்டை

பேருந்தில் ஏறும்போது தவறி விழுந்து பெண் சாவு

அறந்தாங்கி அடுத்த ஆவுடையார்கோவிலில் புதன்கிழமை அரசுப் பேருந்தில் ஏற முயன்ற பெண் பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

அறந்தாங்கி அடுத்த ஆவுடையார்கோவிலில் புதன்கிழமை அரசுப் பேருந்தில் ஏற முயன்ற பெண் பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆவுடையார் கோவிலை அடுத்த பிராந்தனி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையா மனைவி சரோஜா. இவர் உடல்நலக்குறைவு காரணமாக ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று விட்டு திரும்ப ஊருக்கு செல்வதற்காக அரசுப்பேருந்தில் ஏறும் போது நிலை தடுமாறி பேருந்தின் பின்சக்கரத்தில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.நாகுடி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →