நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, கந்தர்வகோட்டை அருகே அரசு பாலிடெக்னிக் மாணவ, மாணவியர் வகுப்புகளை புறக்கணித்து புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் தேர்வினை ரத்து செய்திடவும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டும் கந்தர்வகோட்டை அருகில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி முன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நீட் தேர்வினை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்.
அப்பாவி மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி வழங்கிடவும் என கோஷங்கள் எழுப்பினர். மேலும் நீட் தேர்வினை ரத்து செய்யும் வரை எங்களது போராட்டம் தொடரும் என மாணவ, மாணவியர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.