புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் பாரதிதாசன் பல்கலைகழகக் கல்லூரிகளுக்கிடையேயான தஞ்சை மண்டல அளவிலான ஆண்கள் கபடி போட்டிகள் புதன்கிழமை தொடங்கியது.
போட்டியை மன்னர் கல்லூரி முதல்வர் ஆர். தியாகராஜன் தொடக்கி வைத்தார். செப். 6, 7 என இருநாள்கள் நடைபெறவுள்ள இந்த போட்டியில், தஞ்சை மண்டலத்தைச் சேர்ந்த தஞ்சை, நாகபட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலுள்ள 24 கல்லூரிகளில் இருந்து 300 வீரர்கள் கலந்து கொண்டனர். உடற்கல்வி, உடல்நலக்கல்வி, விளையாட்டுத்துறை இணைப்பேராசிரியர் ஜெ. சுகந்தி, பாரதிதாசன் பல்கலைகழக விளையாட்டுக்குழுச் செயலர் அ. பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக பாரதிதாசன் பல்கலைகழக விளையாட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் கலந்துகொண்டார். இதில் வெற்றி பெறும் இரு அணிகள் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் செப். 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் மண்டலங்களுக்கு இடையேயான கபடி போட்டியில் பங்கேற்ற தகுதி பெறுவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.