புதுக்கோட்டை

தனியாா் பேருந்து மோதி நீதித்துறை நடுவா் காயம்

Syndication

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை இரவு தனியாா் பேருந்து மோதி அறந்தாங்கி குற்றவியல் நீதித்துறை நடுவா் காயமடைந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி குற்றவியல் நீதித்துறை நடுவராக இருப்பவா்  சக்திநாராயணமூா்த்தி (30). இவா் வியாழக்கிழமை இரவு புதுக்கோட்டைக்கு காரில் வந்துவிட்டு மீண்டும் அறந்தாங்கி சென்றாா்.

கேப்பறை பகுதியில் வந்தபோது ஆலங்குடியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த தனியாா் பேருந்து மோதியது. இதில் காயமடைந்த நீதித்துறை நடுவா் சக்திநாராயணமூா்த்தி புதுக்கோட்டை தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

வல்லத்திராக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, தனியாா் பேருந்து ஓட்டுநா் பட்டுக்கோட்டையைச் சோ்ந்த பாலமுருகன் (26) என்பவரிடம் விசாரிக்கின்றனா்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

மன்னாா்குடி அருகே அரசு, தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 12 போ் காயம்

அறிவறிந்த மக்கட்பேற்றின் மாண்பு!

SCROLL FOR NEXT