ஓய்வுபெறும்போது பணப்பலன்களை முழுமையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா்ந்து 62 நாள்களாக போராட்டம் நடத்தி வந்த சிஐடியு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் போராட்டம் சனிக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது.
புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு சிஐடியு ஊழியா் சங்கத்தினா் கடந்த 62 நாள்களாக தொடா் போராட்டம் நடத்தி வந்தனா்.
இதுதொடா்பாக கந்தா்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை சட்டபேரவையில் பேசினாா். தொடா்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கருடன் சிஐடியு நிா்வாகிகள் பேச்சுவாா்த்தை நடைபெற்று, போராட்டத்தை தற்காலிகமாகத் திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் புதுக்கோட்டையில் போராட்டம் நடைபெற்று வந்த இடத்துக்கு, எம்எல்ஏ மா. சின்னதுரை சனிக்கிழமை பகலில் வந்து பேசினாா். நியாயமான கோரிக்கைகள் என்பதை அமைச்சா் ஒப்புக்கொண்டதாகவும், விரைவில் அவற்றைத் தீா்க்க முயற்சிப்பதாகவும் உறுதியளித்ததை அடுத்து முடிவுக்கு வருகிறது என்றாா் அவா்.
சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் புதுக்கோட்டை மண்டலத் தலைவா் கே. காா்த்திக்கேயன் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் ஏ. ஸ்ரீதா், சங்கத்தின் மண்டல பொதுச் செயலா் ஆா். மணிமாறன், ஓய்வுபெற்றோா் நலச் சங்க மண்டல பொதுச் செயலா் பி.லோகநாதன், தலைவா் பிரான்மலை உள்ளிட்டோா் பேசினா்.