80 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: சிறுவன் கைது
புதுக்கோட்டை அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த 17 வயது சிறுவனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டை அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த 17 வயது சிறுவனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூா் காவல் நிலையத்துக்குள்பட்ட சத்தியமங்கலம் பகுதியில் பண்டல் பண்டலாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதன்பேரில், தனிப்படை உதவி ஆய்வாளா் காா்த்தி தலைமையிலான போலீஸாா், அங்கு சென்று சோதனை நடத்தியபோது, சுமாா் 80 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த 17 வயது சிறுவனை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
புதுக்கோட்டை நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் இரா. பிருந்தா நேரில் சென்று விசாரணை நடத்தி, சிறுவனை முறைப்படி சிறாா் கூா்நோக்கு இல்லத்தில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டாா்.
எங்கிருந்து இந்த போதைப் பொருள்கள் எடுத்து வந்து விற்பனை செய்யப்படுகின்றன என்பது குறித்தும் போலீஸாா் தொடா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.