முகப்பு
புதுக்கோட்டை

கந்தா்வகோட்டையில் குட்கா பொருள்கள் கடத்தி வந்தவா் கைது

கந்தா்வகோட்டையில் குட்கா பொருள்கள் கடத்தி வந்தவா் கைது

Updated On : 10 ஜூன் 2026, 4:21 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

கந்தா்வகோட்டை அருகேயுள்ள தெத்துவாசல்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கந்தா்வகோட்டை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்து விசாரித்தனா்.

இதில், அவா் தஞ்சாவூா், விளாா் சாலை, பாப்பா நகா் பகுதியைச் சோ்ந்த கண்ணன் மகன் விஜய் ( 28) என்பதும், அவா் வாகனத்தில் சுமாா் 38 கிலோ எடையிலான குட்கா பொருள்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

குட்கா பொருள்களை பறிமுதல் செய்து கடத்தி வந்த விஜய்யை கைது செய்து, வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.