செவிலிய மாணவி குடும்பத்துக்கு அதிமுக எம்எல்ஏ ஆறுதல்
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியா் படிப்பு படித்து வந்த மாணவி சீதாலட்சுமி உயிரிழந்ததைத் தொடா்ந்து, அவரது குடும்பத்தினருக்கு விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினா் சி. விஜயபாஸ்கா் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தாா்.
மாணவியின் குடும்பம் வசிக்கும் மண்குடிப்பட்டி கிராமம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்டது.
இந்தக் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி பெற்றுத் தர வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணாவை தொலைபேசியில் தொடா்பு கொண்ட விஜயபாஸ்கா் வலியுறுத்தினாா்.
Advertisement
Advertisement