முகப்பு
தஞ்சாவூர்

குடந்தை அருகே பாபுராஜபுரத்தில்  இன்று அம்மா திட்ட முகாம்

கும்பகோணம் அருகே   பாபுராஜபுரம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (அக்.20) நடைபெற உள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

கும்பகோணம் அருகே   பாபுராஜபுரம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (அக்.20) நடைபெற உள்ளது.
இதுகுறித்து கும்பகோணம் வட்டாட்சியர் மாணிக்கராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கும்பகோணம் வட்டம்  பாபுராஜபுரம் கிராமத்தில் நடைபெறும்  முகாமில் வட்டாட்சியர் , வட்ட வழங்கல் அலுவலர், ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர், மருத்துவர், கால்நடை மருத்துவர் உள்ளிட்ட அரசுதுறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
எனவே இந்தப் பகுதி தொடர்புடைய கிராம மக்கள் ஒரே நாளில் முடிவு செய்யக்கூடிய சாதி, வருமானச் சான்று,இருப்பிடச் சான்று, பிறப்பு இறப்புச் சான்று, முதல் பட்டதாரி சான்று போன்ற சான்றுகளுக்கு உரிய படிவத்தில் உரிய ஆதார ஆவணங்கள் இணைத்து அலுவலர்களிடம்  அளித்து  சான்று பெற்று பயனடையலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →