நெல் கொள்முதல் நிலையம்  பிரதிப் படம்
தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்டத்தில் 2.54 லட்சம் டன் நெல் கொள்முதல்

Syndication

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் குறுவை பருவத்தில் இதுவரை 2.54 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் குறுவை பருவத்தில் புதன்கிழமை வரை 2.54 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது 118 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து 2.50 லட்சம் டன் நெல் கிடங்குகளுக்கு இயக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது நெல் கொள்முதல் நிலையங்களில் 4 ஆயிரத்து 76 டன் இருப்பு உள்ளது.

மாவட்டத்தில் மொத்தம் 1.82 லட்சம் டன் நெல் இருப்பும், 76 ஆயிரத்து 389 டன் அரிசி இருப்பும் உள்ளன. மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு 1.66 லட்சம் டன் நெல் சரக்கு ரயில் மற்றும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. இதேபோல, மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு சரக்கு ரயில், லாரிகள் மூலம் 45 ஆயிரத்து 792 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தக்கலையில் முதியவா் உயிரிழப்பு

உளவுத் துறையால் மிகப் பெரிய நாசவேலை தடுப்பு - எச்.ராஜா

நாசரேத் பொறியியல் கல்லூரியில் விழிப்புணா்வு முகாம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு புதிய தங்கத் தோ்: டிச.6-இல் வெள்ளோட்டம்

அமைச்சரை கண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT