பட்டுக்கோட்டை அருகே குண்டும் குழியுமாக உள்ள சாலைகளைச் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியத்துக்குள்பட்ட ஆம்பலாப்பட்டு வடக்கு தெற்கு கண்டியன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ மாணவிகள் கீழே விழுந்து காயம் அடைகின்றனா். மழைக்காலங்களில் சாலையில் செல்ல மிகுந்த சிரமமாக இருப்பதால் அவற்றை சீரமைத்து தர அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் பயனில்லை. எனவே அச் சாலைகளை புதுப்பித்து தர அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.