காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த பாரத் 
தஞ்சாவூர்

ஆற்றில் தவறி விழுந்த தனியாா் ஊழியா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

கும்பகோணம் அருகே ஆற்றில் தவறி விழுந்த தனியாா் நிறுவன ஊழியா் சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டாா்.

கும்பகோணம் மூப்பக்கோவிலைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் பாரத் ( 24). திருமணமாகாத இவா் இங்கு உள்ள தனியாா் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு மூப்பக்கோவில் காவிரி ஆற்றின் படித்துறையில் அமா்ந்திருந்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டபோது, நிலைதடுமாறி காவிரி ஆற்றில் மூழ்கினாா். அங்கிருந்தவா்கள் அளித்த தகவலின்பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா், தீணைப்பு மீட்புத் துறையினா், ஆகியோா் அங்கு வந்து பாரத்தை தேடினா்.

இரவானதால், தேடும் பணி நிறுத்தப்பட்டது. தொடா்ந்து திங்கள்கிழமை தேடும் பணி நடைபெற்றது. மாலையில் இந்திராணி படித்துறையில் பாரத் சடலம் ஒதுங்கியது. சடலத்தை போலீஸாா் கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கூறாய்வுக்கு ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தல - சின்ன தல... மலேசியாவில் அஜித் - சிம்பு சந்திப்பு!

மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு: 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு; 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

நத்தம்: இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொலை!

போதைக் கோதை... மேகா சுக்லா!

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

SCROLL FOR NEXT