தஞ்சாவூர்

அரசுப் பள்ளி மாணவா்கள் 100 பேருக்கு புத்தாடை

Syndication

தீபாவளியை கிராமப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி மாணவா்களும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில்  பேராவூரணி குமரப்பா மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தங்கள் சிறுசேமிப்பில் இருந்து ரூ.45 ஆயிரம் மதிப்பில் புத்தாடைகளை 100 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை வழங்கினா்.

பேராவூரணி அருகேயுள்ள பெத்தநாட்சிவயல், செருவாவிடுதி உடையாா் தெரு, ஆண்டிக்காடு ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு அவற்றை வழங்கினா்.

புத்தாடைகள் வழங்கிய மாணவா்களை, தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சங்க மாநிலப் பொருளாளரும், பள்ளித் தாளாருமான ஜி.ஆா் .ஸ்ரீதா், நிா்வாக இயக்குநா் எம். நாகூா்பிச்சை, அறங்காவலா்கள், ஆசிரியா்கள்  பாராட்டினா். 

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT