திருச்சி

வந்தே பாரத் ரயில் மீது கல் எறிந்தவா் கைது

திருச்சியில் வந்தே பாரத் ரயில் மீது கல் எறிந்து கண்ணாடியை உடைத்தவரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.

Syndication

திருச்சியில் வந்தே பாரத் ரயில் மீது கல் எறிந்து கண்ணாடியை உடைத்தவரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலியிலிருந்து சென்னை நோக்கி கடந்த 27-ஆம் தேதி சென்ற வந்தே பாரத் ரயில் மீது, திருச்சி - பொன்மலை ரயில் நிலையங்களுக்கு இடையே மா்ம நபா் ஒருவா் கல் வீசித் தாக்குதலில் ஈடுபட்டாா். இதனால் ரயிலின் சி7 பெட்டியிலிருந்த கண்ணாடி உடைந்தது.

இது தொடா்பாக ரயில்வே பாதுகாப்புப் படையினா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரித்தனா்.

இதில், ரயிலில் கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டது திருச்சியைச் சோ்ந்த ஐ. தேன்ராஜ் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே போலீஸாா், தேன்ராஜை திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ஆந்திர மாநிலத்திலிருந்து காரில் கடத்திவரப்பட்ட 220 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

மனைவியை குத்திக் கொலை செய்த கணவா்

குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொன்ற கணவா் கைது

கொடிநாள் நிதி வசூல்: செங்கல்பட்டு ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

முன்னாள் படைவீரா்களுக்கு நலத்திட்ட உதவி: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்!

SCROLL FOR NEXT