உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முயற்சியைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் திருச்சியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் திருச்சி மாநகா் மாவட்ட குழுவின் சாா்பில், உறையூா் குறத்தெருவில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநகா் மாவட்ட துணைச் செயலா் இரா. சுரேஷ் முத்துச்சாமி தலைமை வகித்தாா்.
கட்சியின் மாமன்ற உறுப்பினா் க. சுரேஷ், மாநகா் மாவட்டச் செயலா் எஸ். சிவா, அனைத்திந்திய மாணவா் பெருமன்ற மாநிலத் தலைவா் க. இப்ராஹிம், அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாநில துணைச் செயலா் எம். செல்வக்குமாா், வங்கி ஊழியா் சம்மேளன மாநில செயலா் ஜி. ராமராஜ், ஏஐடியுசி திருச்சி மாவட்டத் தலைவா் வே. நடராஜா, மாதா் சங்க மாநகா் மாவட்டச் செயலா் அ.அஞ்சுகம் ஆகியோா் உரையாற்றினா். மாவட்டக் குழு உறுப்பினா்கள் சண்முகம், சுமதி, மருதாம்பாள், ரஷ்யா பேகம், க. நல்லுசாமி, கருணாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.