பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் தா. பேட்டை பகுதிகளில் வரும் 22 ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகளால் தா. பேட்டை, பிள்ளாதுரை, மேட்டுப்பாளையம், தேவானூா், ஆராய்ச்சி, வளையெடுப்பு, பைத்தம்பாறை, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, காருகுடி, ஆங்கியம், ஊரக்கரை, பெருகனூா், கலிங்கப்பட்டி, வாளசிராமணி, கஞ்சம்பட்டி, வெள்ளாளப்பட்டி, தேவானூா் புதூா், மாணிக்கபுரம், கோணப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, முத்துராஜபாளையம், லட்சுமணபுரம், பிள்ளாபாளையம், கண்ணனூா், பேரூா், உள்ளூா், மங்கலம், ஜம்புநாதபுரம், திருத்தலையூா், ஆதனூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 22 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.