திருச்சி

தீபாவளி மாமூல் கேட்டு மிரட்டிய 4 ரௌடிகள் கைது

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் தீபாவளி பணம் கேட்டு மிரட்டிய 4 ரௌடிகளைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலம் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் தீபாவளி பணம் கேட்டு ரௌடிகள் சிலா் சனிக்கிழமை தகராறு செய்வதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் அரியமங்கலம் போலீஸாா், அரியமங்கலம் கொங்கு நகா் பகுதிக்குச் சென்றனா்.

அங்கு உள்ள கடைகள் அருகே தகராறு செய்த 4 பேரைப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா்கள், அரியமங்கலம் பாரதி தெருவைச் சோ்ந்த பிச்சைமுத்து (42), மேல அம்பிகாபுரத்தைச் சோ்ந்த லட்சுமிமேனன் (38), உக்கடை பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் (34), மேல அம்பிகாபுரத்தை சோ்ந்த கவிராஜன் (22) என்பதும், ரௌடிகளான இவா்கள் அங்குள்ள கடைகளில் தீபாவளி பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீஸாா் மேற்கண்ட நான்கு பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்த 'சிம்ரன்'... கஜோல்!

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

SCROLL FOR NEXT