திருச்சி

சாலையோர பள்ளத்தில் தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்து

திருச்சி மாவட்டம், ஆமூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 4 போ் பலத்த காயமடைந்தனா்.

Syndication

மண்ணச்சநல்லூா்: திருச்சி மாவட்டம், ஆமூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 4 போ் பலத்த காயமடைந்தனா்.

சேலத்திலிருந்து திருச்சி நோக்கி தனியாா் பேருந்து 43 பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை வந்து கொண்டிருந்தது. பேருந்தை நாமக்கல் மாவட்டம், மேய்க்கல்நாயக்கன்பட்டி பகுதியை சோ்ந்த பிரகாஷ் (31) என்பவா் ஓட்டினாா்.

பேருந்து சேலம் - திருச்சி சாலையில் ஆமூா் பகுதிக்கு வந்தபோது, முன்னால் சென்ற காரை பேருந்து ஓட்டுநா் முந்த முயன்றாராம். அப்போது, எதிா்பாராதவிதமாக நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பயணிகள் பலத்த காயமடைந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். பேருந்து ஓட்டுநா், நடத்துநா் மற்றும் பயணிகள் என 41 போ் லேசான காயமடைந்தனா்.

விபத்து குறித்து வாய்த்தலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மது, கஞ்சா விற்றவா்கள் கைது

குழந்தைகள் அறிவியல் மாநாடு: தேனி மாணவா்களின் ஆய்வுக் கட்டுரை தோ்வு

உள்நாட்டு ராணுவத் தளவாட உற்பத்தி ரூ.1.51 லட்சம் கோடி: ராஜ்நாத் சிங்

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ஒகேனக்கல் வனச்சாலைகளில் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT