திருச்சி

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

மணப்பாறை அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் இளைஞா் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

Syndication

மணப்பாறை: மணப்பாறை அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் இளைஞா் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே இளங்காகுறிச்சி ரயில்வே கேட் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் இளைஞா் ஒருவா் அடையாளம் தெரியாத ரயிலில் அடிபட்டு உடல் சிதைந்து இறந்து கிடப்பதாக திருச்சி ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற ரயில்வே போலீஸாா், இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனா்.

இதில், உயிரிழந்தவா் எல்லையம்மன் கோவில்பட்டியை சோ்ந்த

முனியப்பன் மகன் பொன்னுசாமி (23) என்பது தெரியவந்தது.

அவரின் உயிரிழப்பு குறித்து திருச்சி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT