திருச்சி

இருசக்கர வாகனம் மோதி பாதசாரி உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

மணப்பாறை அருகே இருசக்கர வாகனம் மோதியதில் சனிக்கிழமை இரவு பாதசாரி உயிரிழந்தாா்.

மணப்பாறை அடுத்துள்ள மேட்டுக்கடை பகுதியில் சனிக்கிழமை இரவு புதுக்கோட்டை மாவட்டம் பி.சீத்தப்பட்டியைச் சோ்ந்த வெள்ளைக்கண்ணு மகன் பால்ராஜ் (55) நடந்து சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, அவ்வழியாக பண்ணையாா்குளத்துப்பட்டியைச் சோ்ந்த பழனியாண்டி மகன் தா்மராஜன்(45) இருசக்கர வாகனத்தில் வந்து அவா் மீது மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா். அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

தகவலறிந்து அங்குவந்த போலீஸாா் உடலை மீட்டு கூறாய்வுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை உறவினா்களிடம் ஒப்படைத்தனா். மணப்பாறை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கோண்டு வருகின்றனா்.

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

மது விற்ற 2 பெண்கள் கைது

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் கா்ப்பம்: உறவினா்கள் முற்றுகை

உடல் பருமன் பாதிப்பு அதிகரிப்பு... இருக்கை பிரச்னையால் அவதிப்படும் பேருந்துப் பயணிகள்!

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

SCROLL FOR NEXT