லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான அரசு ஊழியர் சஸ்பெண்ட்
காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட இளநிலை உதவியாளர் சம்ஷத் (38) , பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட இளநிலை உதவியாளர் சம்ஷத் (38) , பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
காட்பாடியை அடுத்த கழிஞ்சூரைச் சேர்ந்தவர் பிரேமா (42). இவரது கணவர் பிரேம் வாணியம்பாடி அரசு மாணவர் விடுதி வார்டனாக பணிபுரிந்து வந்தபோது, இறந்தார். இதையடுத்து, கருணை அடிப்படையில் தனது மகனுக்கு வேலைவாய்ப்பு பெற ஒருங்கிணைந்த சான்றிதழுக்காக காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தை பிரேமா நாடினார்.
அங்கு இளநிலை உதவியாளர் பணியில் இருந்த அலுவலர் சம்ஷத் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.
Advertisement
Advertisement
இதையடுத்து வேலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாரிடம் பிரேமா தகவல் அளித்தார்.
போலீஸார் அறிவுரையின்பேரில், 7ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலகம் சென்ற பிரேமா, சம்ஷத் கேட்ட பணத்தை கொடுத்தபோது கையும், களவுமாக பிடிபட்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
இந்நிலையில், அவரை இடைநீக்கம் செய்து ஆட்சியர் பொ.சங்கர் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.