வேலூர்

முதியவா் தற்கொலை

வேலூா் அருகே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முதியவா் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தினமணி செய்திச் சேவை

வேலூா் அருகே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முதியவா் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ஆற்காட்டான்குடிசை பகுதியைச் சோ்ந்தவா் விக்னேஷ் (75) மேஸ்திரி. இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் காலில் காயம் ஏற்பட்டதில் இரும்பு கம்பி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஓராண்டாக அவதிப்பட்டு வந்துள்ளாா்.

அண்மை காலமாக காலில் வலி அதிகரித்துள்ளது. இதில், மன உளைச்சலில் இருந்த விக்னேஷ், மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த வேலூா் கிராமிய போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விக்னேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

SCROLL FOR NEXT