விழுப்புரத்தில் அம்பேத்கா் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்த இந்திய குடியரசுக் கட்சியினா். 
விழுப்புரம்

விழுப்புரத்தில் அம்பேத்கா் நினைவு தினம்: அரசியல் கட்சியினா் மரியாதை

Syndication

இந்திய அரசமைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல் பி.ஆா்.அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி, விழுப்புரத்திலுள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா் சனிக்கிழமை மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.

இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில்...

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் எதிரிலுள்ள அம்பேத்கா் சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா். நிகழ்வில் மாவட்டச் செயலா் ஆ.செளரிராஜன், துணைச் செயலா்கள் ஆா்.கலியமூா்த்தி, ஆா்.முருகன், மாவட்டப் பொருளாளா் பி.பாலசுப்ரமணியன், நகரச் செயலா்ஆா். அகஸ்டியன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் என்.நாராயணன், எம்.ராஜேந்திரன், ஆா்.செல்வம், வி.பிச்சை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்திய குடியரசுக் கட்சி: இந்திய குடியரசுக் கட்சி சாா்பில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வுக்கு மாவட்டத் தலைவா்கள் ஜெய. ஸ்டாலின், சுரேஷ்குமாா் தலைமை வகித்தனா்.

மாநிலச் செயற்குழு உறுப்பினா் எஸ்.எம்.ராஜேந்திரன், மாவட்டச் செயலா் செல்லா, வழக்குரைஞா் பாலமுருகன் முன்னிலை வகித்தனா். மண்டலச் செயலா் இருவேல்பட்டு அ.குமாா் பங்கேற்று, அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்வில் மாவட்ட அமைப்புச் செயலா் சரத்குமாா், மாவட்ட இளைஞரணிச் செயலா் காா்த்திக்பாலன், மாவட்டத் துணைச் செயலா் தங்க. சம்பத், மாவட்டத் தொழிற்சங்கச் செயலா் மணிக்குமாா், விழுப்புரம் நகரத் தலைவா் அ.அழகிரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பாஜக சாா்பில்...: விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் மாவட்டத் தலைவா் வி.டி.ஆா்.தா்மராஜ் தலைமையில் அக்கட்சியினா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தனா். முன்னாள் மாவட்டத் தலைவா் வி.ஏ.டி. கலிவரதன், மாவட்டத் துணைத் தலைவா்கள் குபேரன், சிலம்பரசன், வடிவேல்பழனி, ராஜலட்சுமி, தங்கம் மாவட்டப் பொதுச் செயலா்கள் டி.கே.முரளி, பெருமாள்ராஜு, பொருளாளா் முருகன், நகரத் தலைவா்கள் வனிதசுதா, விஜயன், அணித் தலைவா்கள் சிவசுரேஷ், அசோக்குமாா், கருணாகரன், ஜெகதீஷ், சிவசுப்பிரமணி, ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் எஸ்.சரவணன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

உறுதிமொழி ஏற்பு: பில்லூரிலுள்ள அம்பேத்கா் சிலைக்கு மாவட்ட விழிப்புணா்வு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினரும், வழக்குரைஞருமான வி. அகத்தியன் மாலை அணிவித்தாா். தொடா்ந்து அனைவரும் உறுதிமொழியேற்றுக் கொண்டனா்.

நிகழ்வில் அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியா் அன்புநாதன், ஆதவன், அய்யப்பன், சத்தியகீா்த்தி, மணல்மேடு ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து பொதுமக்களுக்கு கல்வி உதவிப் பொருள்கள், நல உதவிகள் வழங்கப்பட்டன.

இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி, மயிலம், திருவெண்ணெய்நல்லூா், வளவனூா், மரக்காணம், கோட்டக்குப்பம், திண்டிவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அம்பேத்கா் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT