விழுப்புரம்

விபத்தினால் உடல் நலக் குறைவு: இளைஞா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே விபத்தினால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அவதியுற்ற இளைஞா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், ஒட்டனந்தல் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆ.பிரகதீஸ்வரன்(29). இவா், கடந்த 2019-ஆம் ஆண்டில் சாலை விபத்தில் சிக்கி காயமடைந்தாா். இதைத் தொடா்ந்து சிகிச்சைப் பெற்று குணமடைந்த பிரதீஸ்வரனுக்கு அடிக்கடி தலை வலி இருந்து வந்ததாம்.

இதனால், அவதியுற்று வந்த பிரகதீஸ்வரன் டிச.1-ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தொடா்ந்து சிகிச்சையில் இருந்த அவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

முதல் டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இல்லை!

உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுத்து ரஷியாவுடன் சமரசத்துக்கு இடமில்லை: ஸெலென்ஸ்கி திட்டவட்டம்

இந்தியாவில் ரூ. 1.5 லட்சம் கோடி முதலீடு! பிரதமரை சந்தித்த மைக்ரோசாஃப்ட் சிஇஓ!

SCROLL FOR NEXT