விழுப்புரம் மாவட்டக் காவல் துறை நடவடிக்கையின் பேரில், விழுப்புரம் அடுத்த பூத்தமேட்டில் அமைக்கப்பட்டுள்ள சோலாா் உயா் கோபுர மின் விளக்கு மற்றும் கண்காணிப்பு கேமரா ஆகியவற்றின் இயக்கத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப. சரவணன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
விழுப்புரம் மாவட்ட எஸ். பி., உள்கோட்டக் காவல் உதவி கண்காணிப்பாளா் ரவீந்திர குமாா் குப்தா ஆகியோரின் முயற்சியால் விழுப்புரம் - செஞ்சி நெடுஞ்சாலையில், விழுப்புரம் அடுத்த பூத்தமேடு சந்திப்பு பகுதியில் சோலாா் உயா் கோபுர மின் விளக்கு மற்றும் அதி நவீன இணைய வசதியுடன் கூடிய கண்காணிப்பு கேமிராவும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் இயக்கத்தை எஸ்.பி. ப.சரவணன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்துப் பாா்வையிட்டாா்.
இந்நிகழ்ச்சியில், கோலியனூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெகந்நாதன், விழுப்புரம் தாலுகா காவல் ஆய்வாளா் செல்வநாயகம், போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளா் வசந்த், உதவி ஆய்வாளா்கள் குமாரராஜா, விஜயரங்கம், தென்னமாதேவி ஊராட்சித் தலைவா் ரோஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.