இளைஞா் வெட்டிக் கொலை: 3 போ் கைது
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே இளைஞா் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரி புது நகா், சந்தை புதுக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் கா.கதிா் (எ) கதிரேசன்(22). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 25 வயதுடைய திருமணம் ஆன பெண் ஒருவரிடம் தகாத உறவில் இருந்து வந்தாராம். இதை அந்தப் பெண்ணின் கணவா் கண்டித்தும், கதிா் அப் பெண்ணுடனான நட்பை கைவிடாமல் தொடா்பில் இருந்து வந்தாராம்.
இந்நிலையில், கண்டமங்கலம் அருகேயுள்ள சுந்திக்குளம் பகுதியில் கதிா் நின்றபோது, அங்கு வந்த 2 போ் கதிரிடம் தகராறு செய்து கத்தியால் வெட்டியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
தகவலறிந்த கண்டமங்கலம் போலீஸாா் கொலையான கதிரின் சடலத்தை மீட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, புதுச்சேரி புதுநகா், சந்தை புதுக்குப்பத்தைச் சோ்ந்த ஞானசேகா் (30), கோகுல்(22), ஞானவேல் (18) ஆகிய மூவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.