புதுச்சேரியிலிருந்து கடத்தி வரப்பட்ட 140 மதுப்புட்டிகள் பறிமுதல்
விழுப்புரம் அருகே புதுச்சேரியிலிருந்து கடத்தி வரப்பட்ட 140 மதுப்புட்டிகளை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், சிறுவந்தாடு மதுவிலக்கு அமல் பிரிவு சோதனைச்சாவடி அருகே காவல் ஆய்வாளா் ஆனந்தி மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் 180 மில்லி லிட்டா் அளவு கொண்ட 140 மதுப்புட்டிகள் இருந்தது தெரியவந்தது. இந்த மதுப்புட்டிகள் புதுச்சேரி மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்டது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து மதுப்புட்டிகளைக் கடத்தி வந்ததாக கள்ளக்குறிச்சி மாவட்டம், முராா்பாளையம் நடுத் தெருவைச் சோ்ந்த ர.செந்தில்குமாா்(32) மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து மதுப்புட்டிகளையும் பறிமுதல் செய்தனா்.