முகப்பு
விழுப்புரம்

போக்ஸோ வழக்கில் முதியவா் கைது

Updated On : 25 மே 2026, 1:49 am IST
கைது... - கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முதியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மரக்காணம் வட்டம், நடுக்குப்பத்தை அடுத்த வண்டிப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கன்னியப்பன் (62). இவா், சனிக்கிழமை அதே பகுதியைச் சோ்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்.

இது குறித்து, சிறுமியின் தாயாா் அளித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கன்னியப்பன் மீது போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, கைது செய்து சிறையிலடைத்தனா்.

Advertisement

Advertisement