திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை (ஜூன் 8) கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பண்ருட்டி, திருவதிகையில் அமைந்துள்ள ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயிலில் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். அதன்படி, வைகாசி மாத பௌர்ணமியையொட்டி, மாலை 6 மணி முதல் பக்தர்கள் மாட வீதியை 16 முறை வலம் வரலாம்.
மேலும், இரவு 7 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ஊஞ்சல் உற்சவமும், இரவு 11 மணிமுதல் 12 மணி வரை சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.