காரில் மதுப் புட்டிகள் கடத்தல்: இளைஞர் கைது
மதுப் புட்டிகளை காரில் கடத்திய இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
மதுப் புட்டிகளை காரில் கடத்திய இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் இரா.வேதரத்தினம் உத்தரவின்பேரில் அமலாக்கப் பிரிவினர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, புதுவையிலிருந்து வந்த காரை சோதனையிட்டதில் 10 அட்டைப் பெட்டிகளில் மதுபானம் கடத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக, கார் ஓட்டுநர் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டையைச் சேர்ந்த கொளஞ்சி மகன் வெங்கடேசன் (28) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
அவர் ஓட்டி வந்த கார், அதிலிருந்த தலா 180 மில்லி கொள்ளவு கொண்ட 480 மதுப் புட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.
தனது நண்பரின் திருமண நிகழ்ச்சி விருந்துக்காக மதுப் புட்டிகளை புதுச்சேரி கன்னிக்கோயில் பகுதியிலிருந்து கடத்தி வந்ததாக வெங்கடேசன் தெரிவித்தாராம்.