கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் திட்டக்குடியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை வட்டம், திருவேகம்பட்டூா் கிராம உதவியாளராக பணியாற்றி வந்தவா் ராதாகிருஷ்ணன். இவா் அதே பகுதியில் வட்டாட்சியரது உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அண்மையில் ஈடுபட்டாா். அப்போது, ஆக்கிரமிப்பாளரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தாா். இதுகுறித்து, திருவேகம்பட்டூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
எனவே, கிராம உதவியாளரை தாக்கி கொலை செய்தவரை கைதுசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட அமைப்புசாரா செயலா் ஒபேத் தலைமை வகித்தாா். திட்டக்குடி வட்ட தலைவா் காசி, வட்டச் செயலா் சுப்பிரமணி மற்றும் கிராம உதவியாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், உயிரிழந்த ராதாகிருஷ்ணன் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம்
இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தினா்.