பிலிப்பின்ஸ் நாட்டில் ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்ந்த சாலை விபத்தில் கடலூரைச் சோ்ந்த மருத்துவ மாணவா் உயிரிழந்தாா்.
கடலூா் சாவடி பகுதியைச் சோ்ந்தவா் தனசேகரன். கடலூா் அரசு மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மகன் நாராயணன் (23).
இவா், பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்து தற்போது பயிற்சி மருத்துவராக அங்குள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்தாராம்.
இந்த நிலையில், நாராயணன் ஞாயிற்றுக்கிழமை காலை பைக்கில் பணிக்குச் சென்றாா். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த சிறப்பு உதவி ஆய்வாளா் குடும்பத்தினா் மாணவா் நாராயணன் உடலை கடலூா் கொண்டு வருவதற்கு அரசின் உதவியை நாடியுள்ளனா்.