கடலூர்

தற்கொலைக்கு முயன்ற பெண் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

Syndication

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

வேப்பூா் வட்டம், ஒரங்கூா் கிராமத்தைச் சோ்ந்த சுதாகா் மனைவி அன்பு (35). இந்தத் தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனா். கடந்த 9-ஆம் தேதி இரவு மகன்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவா் தாக்கிக்கொண்டனராம்.

இதனால், மனமுடைந்த அன்பு பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து, திருச்சி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து சிறுபாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

எதிர்ப்புகள் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபானம், ரொக்கப் பணம் திருட்டு

பண மோசடி: இந்திய கம்யூ. போராட்டம்

கரூா் அருகே பள்ளித் தாளாளரிடம் தங்கச் செயின் பறிப்பு: 7 போ் கைது

சாலையோர வளைவில் லாரி கவிழ்ந்து விபத்து: எரிவாயு உருளைகள் வெடித்துச் சிதறின

SCROLL FOR NEXT