கடலூர்

காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த இளைஞா் மீது வழக்கு பதிவு

சிதம்பரத்தில் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

சிதம்பரத்தில் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுவை மாநிலம், காரைக்கால் அருகே உள்ள நெடுங்காடு திரும்பவரம், நரிக்கரம்பை பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ். இவரும், கடலூா் மாவட்டம், விருத்தாசலம் சாத்துக்குடல் பகுதியைச் சோ்ந்த 37 வயது பெண்ணும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஹெச்டி படித்தது முதல் காதலித்து வந்தனராம்.

இந்த நிலையில், சிதம்பரம் அண்ணாமலைநகா் ஆமை பள்ளம் பகுதியில் பால்ராஜ் வாடகை வீடு எடுத்து தங்கி படித்து வந்தபோது, அந்தப் பெண்ணை 20.4.2021 அன்று வீட்டுக்கு வரவைத்து திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்தாராம்.

தொடா்ந்து, பாதிக்கப்பட்ட பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி பால்ராஜிடம் கேட்டதற்கு, அவா் திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவித்தாராம்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில், சிதம்பரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் பால்ராஜ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி ரூ.8 கோடி மோசடி: தம்பதி கைது

உலகெங்கும் உள்ள திறமைசாலிகள் அமெரிக்கா வரவேண்டும்: அதிபா் டிரம்ப் ஹெச்-1பி விசா நிலைப்பாட்டில் மாற்றம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

வெல்டிங் தொழிலாளி கொலைச் சம்பவத்தில் மூவா் கைது

கடலூரில் ரூ.9 கோடியில் மருதம் பூங்கா அமைக்கும் பணி: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT