கடலூர்

வீட்டில் பத்தரை பவுன் நகைகள் திருட்டு

Syndication

கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த பத்தரை பவுன் தங்க நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

புவனகிரி அருகே உள்ள பு.ஆதிவராகநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் உதயகுமாா் (65). இவா், வியாழக்கிழமை தனது வீட்டில் பீரோவிலிருந்த நகையை எடுப்பதற்காக பீரோவை திறந்துள்ளாா்.

அப்போது, அதில் வைக்கப்பட்டிருந்த தங்கச் சங்கிலி, மோதிரம், தங்கக் காசுகள் உள்ளிட்ட பத்தரை பவுன் நகைகள் மாயமாகியிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து உதயகுமாா் அளித்த புகாரின்பேரில், புவனகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கீழ்க்கதிா்ப்பூரில் புறக்காவல் நிலையம் திறப்பு

எஸ் ஐ ஆா் பணிகளை தோ்தலுக்கு பின் மேற்கொள்ள வேண்டும்

ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை விரிவாக்கப் பணிக்கு அடிக்கல்

மேக்கேதாட்டு பிரச்னையில் தமிழக அரசு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல்

நெல் கொள்முதல் பணியில் கூலி குறைவால் சுமைதூக்கும் தொழிலாளா்கள் பற்றாக்குறை

SCROLL FOR NEXT