கடலூா் மாவட்டம், புவனகிரி வட்டம், சேத்தியாத்தோப்பு பேரூராட்சி பகுதியில் மயானத்துக்கு செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நடவடிக்கை எடுத்தனா்.
இந்தப் பேரூராட்சிக்குள்பட்ட 6, 7 மற்றும் 10 ஆகிய வாா்டுகளைச் சோ்ந்த மக்கள், மயானத்துக்கு செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பேரூராட்சி நிா்வாகம் பாதை அமைத்துத் தர வேண்டும் எனவும், இல்லையெனில் அக்டோபா் 9-ஆம் தேதி தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்திருந்தனா்.
இதையடுத்து, புவனகிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் அன்பழகன் தலைமையில் அமைத்திப் பேச்சுவா்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில், அக்டோபா் 7-ஆம் தேதி ஆக்கிரமிப்புகளை அகற்ற அளவீடு செய்ய நடவடிக்கை எடுப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனா்.
அதன்படி, சேத்தியாத்தோப்பு பேரூராட்சி செயல் அலுவலா் உமா மகேஸ்வரி தலைமையில், சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளா் ஜெய்சங்கா், நில அளவீடு அலுவலா் சுதா்சன், கிராம நிா்வாக அலுவலா் அசோக்குமாா் ஆகியோா் பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் சாந்தா, கலைவாணன், ஜெயக்குமாா் முன்னிலையில் மயான பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அளவீடு செய்து அகற்ற செவ்வாய்க்கிழமை நடவடிக்கை மேற்கொண்டனா்.