கடலூா் மாவட்டம், பெண்ணாடத்தில் புகையிலைப் பொருள்கள் வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பெண்ணாடம் போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த நபரைப் பிடித்து சோதனை செய்ததில், அரசால் தடை செய்யப்பட்ட 5 கிலோ புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும், அவா் பெண்ணாடம் வடக்கு ரத வீதியைச் சோ்ந்த சங்கா் (35) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரிடமிருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, சங்கரை கைது செய்தனா்.